கொலு பொம்மைகள் வைப்பதெற்கென்றே அந்த பெரிய பீரோலை அப்பா செய்ததாக அம்மா சொல்லிக் கொண்டிருப்பாள்.மாடியின்- அதை மச்சு என்று சொல்வதுதான் வழக்கம்- கடைசிக் கட்டில் நடுவில் நிற்கும் சற்று பிரம்மாண்டமாய்....அந்தக் கட்டையே இரண்டாக பிரித்து இரண்டு அறைகள் போல ஆக்கி வைத்திருக்கும் பீரோல். அதை பெரும்பாலும் கொலு வரும் போதுதான் திறப்பார் அப்பா.அதற்குள் பெரிய மண் பொம்மைகள் தவிர, நிறைய சிறிய ஆனால் அபூர்வமான விளையட்டுச் சாமான்கள் இருக்கும்.அப்பா நடத்தி வந்த திருநெல்வேலி டெயிலரிங்க் ஹவுஸ்-மூடிய பின் சிங்கர் மிஷினில் உள்ள நல்ல உதிரிப் பாகங்கள் இருக்கும் ஜெர்மன் கத்திரிக்கோல்கள். கூர் மழுங்காமல் இரண்டு மூன்று இருக்கும்..(அதில் ஒன்றை 9.01.1972-ல் நீண்ட நாட்களாகக் கேட்டு வந்த கார்மேகம் டெயிலருக்கு விற்று எனக்கு எம்.எஸ் சி பீஸ் கட்டக் கொடுத்தார் 121 ரூபாய்க்கான அந்த ரசீது இன்னமும் திருக்குறள்(மு.வ) உரை நூலுக்குள் இருக்கிறது.குடும்பம் சிறுகச் சிறுக அழிந்து கொண்டிருந்த நேரம்..மொத்த நம்பிக்கையையும் என் மீது வைத்து ஒவ்வொன்றாகக் காலியாகிக் கொண்டிருந்தது வீடு.)
புரட்டாசி அம்மாவசை வந்ததுமே மச்சின் நடு ஹாலை தூத்துப் பெருக்கி மொழுகி எடுத்து வைத்து விடுவாள் அம்மா... திருமணமாகும் வரை அக்காதான் அந்த வேலையைச் செய்வாள். கொலுவே அவளுக்காகத்தான்.. நன்றாக ஹார்மோனியம் வாசிப்பாளாம். ஹார்மோனியத்திற் கென்று தனியாய் ஒரு மரப்பெட்டி. எனக்குத் தெரிந்து அது பெட்டிக்குள்ளேயேதான் இருந்தது. ஏதோஒரு கொலுவிற்கு யாரோ மாமியாத்துப் பொண் வாசித்து “குயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம் குமரன் வரக் கூவுவாய்...” என்று பாடிய நினைவு... அநேகமாய் வி.எஸ். கிருஷ்ணன் அக்கா சிண்டாளுவாய் இருக்கும். அந்த ஆர்மோனியப் பெட்டியையும் அப்பா விற்க வேண்டிய சூழல் . அக்காவிற்குத் தெரியாது.. பெட்டி மட்டும் இருந்தது..நீண்ட நாள் கழித்து வந்திருந்த போது தெரிந்து கொண்டு ரொம்பவும் கோபப்பட்டாள்...அழுதாள்..அப்பா அமைதியாக இருந்தார். அவர் முகத்திலும் அழுகையின் ரேகைகள்..”ஏன் விக்கிறதுக்கு ஒன்னுமே இல்லையாங்கும்...ஏண்ட்ட சொல்லிருந்தா நானாவது குமார் அப்பாட்ட சொல்லி வாங்கியிருப்பேனே..” என்றாள் நானும் அப்பாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்...எனக்கு நான் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று தோன்றியது..பேசாமல் ஏதாவது வேலைக்குப் போயிருந்தால் இந்த சங்கடமெல்லாம் அப்பாவுக்கு இல்லாமலிருந்திருக்கும்...என்று ஒரு குற்ற உணர்ச்சி. இன்று வரை அது மறையவே இல்லை....அன்றும் சசி நினைவுக்கு வந்தாள்.. இன்றும்....
“வெற்றி அடைந்தவன் நான்
அதைக் கொண்டாட விடமாட்டாய்
நீ...”.என்ற.(Charles Ghasley)யின் கவிதை வரிகளினூடே அவளது அந்த நேரத்து முகம் இப்போது நினைவில் தோன்றுகிறது. ராமச் சந்திரனுக்கும் பிடித்த வரிகள் இவை.
அப்பா கொலு வைக்கும் அழகே தனி சில வீடுகளைப்போல் கொலுப்படி கிடையாது. மாடியின் நடு நாயகமான ஹாலின் நாலு வாசலின் எட்டு கதவுகளையும் கழற்றி எடுத்து எட்டு தட்டுக்களாயிற்று. இரண்டு அண்ணன்களின் இரண்டு சிறிய பீரோல். இரண்டும் இரட்டைப் பிள்ளை மாதிரி இருக்கும். இரண்டு மேஜைகள்...அப்புறம் இரட்டை அலமாரி, இரட்டை ஸ்டூல்கள் என்று எல்லாமே கச்சிதமாக இருக்கும்.அவற்றின் மீது கதவுகளைக் கவிழ்த்தி மேல் தட்டில் இரண்டு பிஸ்கட் டின்களை வைத்து ஒரு சிறிய பலகை ஒன்பது தட்டுக்களாயிற்று.இனித்தான் எனக்கு வேலை வரும் ஏற்கெனெவே பீரோலில் இருந்து எடுத்த பொம்மைகள் ஹாலில் ஓரமாய் தரையில் இருக்கும். அதை ஒவ்வொன்றாய் அப்பாவும் சின்ன அண்ணனும் எடுத்துத்தர பொடியனான நான் மேலே ஏறி அப்பபா சொல்கிற விதத்தில் வைப்பேன். எப்பவும் எல்லாத்துக்கும் டாப்பில தக்ஷிணா மூர்த்தி பொம்மை. அதன் அழகே தனி. வர்ணமும் வித்தியாசமானது.பள பளவென்றிருக்காது.. பன்ருட்டி பொம்மைகள் ...அப்பறம் அழகான வெள்ளை நிறத்தொரு பசு அதன் கன்று.....அடுத்த தட்டில் முப்பெரும் தேவியர் தங்கள் இணைகளுடன் பிரம்மா பொம்மை மட்டும் தனியா சற்று சிறியது. அடுத்த தட்டில் அஷ்ட லக்ஷ்மிகள் இவையும் அழகோ அழகாயிருக்கும்.அடுத்த தட்டில் தலைவர்கள் காந்தி, நேரு, படேல், போஸ். பாரதி. என்று இரண்டு போஸ் சிலைகள் இருந்தது... ஒன்று அப்பாவின் நண்பர் ஒரு I .N. A போராளி தந்தது...அப்பாவுக்கும் போஸை கொஞ்சம் பிடிக்கும் ஒரு வேளை அவர் காரணமோ என்னவோ.. அவர் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் வேலை பார்த்தார்.. கணக்கு வழக்கு பரார்ப்பவராக அவரைப் பற்றி தனியே நிறைய எழுதலாம்....(ஆனால் இன்று ஒரு போஸ் பொம்மை கூட இல்லை மற்றவை சில இருக்கின்றன)
காலையில் ஆரம்பித்த இந்த வேலைகள் மதியம் ஒரு மணி வாக்கில் சரியாக முடியும். அப்பா அன்று ரொம்ப உற்சாகமாயிருப்பார். “ஏல கூலக்ககடை பஜார் முக்கில போய் சல்லிப் பக்கடா வாங்கிட்டு வாரியா என்பார் அந்தக் கடையிலதான் மத்யான நேரத்துக்கு பக்கடா கிடைக்கும்..(அதுக்கு அடுத்த பெட்டி கடையில தான் பின்னாளில் இஞ்சி அடித்து விட்டு தசராவுக்கு விடிய விடிய முழிச்சு பத்துப் பதினைந்து அம்மன் கோயில் போவோம். கடைசியாய் விடியப் போகிற ப்ரம்ம முஹூர்த்தத்தில் சப்பரம் பார்ப்போம் லாலா சத்திர முக்கில் பன்னிரண்டு சப்பரங்கள் ஒரே நேரத்தில் கூடி நிற்கும்...பார்க்க அற்புதமாயிருக்கும். அதைப் பார்க்கிற ஒவ்வொரு வரிடமும் எங்கெங்கு காணினும் சக்தியடா பாடல் வரிகள் மன்சுக்குள் ஓடும்.நம்ம வீட்டுத் தெய்வம் படப் பாடல். அதெல்லாம் அப்பா செத்ததுக்கு அப்புறம்) இல்லைன்னா போத்தி ஓட்டலிலேயே சூடா உருளக்கிழங்கு போண்டா போட்டிருப்பாங்க அதை வாங்கிட்டு வரச் சொல்லி மத்யானம் சாப்பாடுக்கு சேர்த்துக் கிடுவோம்.
(தொடரும்)
சிறுத்தொண்டம்
விடுமுறைக்கு
அக்கா தன் குழந்தைகளுடன்
வருவாள்
வெறுங்குழி துடைத்து
அடுத்த குழி: எதிர்க் குழியின்
முத்தள்ளுகிற
பால்லாங்குழி லாவகத்தோடு
சிதறிக் கிடக்கிற
வீடு நேர்ப்படும்
...... ....... ........ ......
...... ....... ......... ......
அக்காவின் ஆர்வம்
அவளின் ஆர்மோனியத்தையும்
விற்றுத் தின்றதிற்கான
நளினச் சீறலில்
சுருதியற்றுப் போகும்
உன் வேலையற்ற
பொழுதுகளின்
வழக்கமான சீறல் கூட
அவளிடம் பணிந்து
சிரிக்கும்
ஆனாலும்
தனக்கு பொங்கல்ப் படி
தர முடியாததை
மாமியார் சொன்னதாய்ச்
சொல்லி
உன் மூளையில் முளைத்த
மீசையை
இரக்கமின்றிச்
சுட்டெரிப்பாள்
என் தோழனே
‘அக்காக்களால்
பிரியங் கொட்ட
முடிகிறதே தவிர
பால் தர முடிகிறதில்லை’
(ஞான பீடம் –குறுங் காவியத்திலிருந்து)
Sunday, October 5, 2008
Saturday, September 27, 2008
ஒரு பத்தியில் எழுதுக
அழகான கையெழுத்தில் அந்தக் கேள்விகளுக்குப்பதில் எழுதி இருந்தேன். முதல்ப் பக்கத்தில் இரண்டு பதில்களும் புதிதாய் ஒரு டியூஷன் வாத்தியார் தயாரித்துக் கொடுத்தவை, அவரே நன்கு மனப்பாடம் செய்ய வைத்து எழுதிப் பார்த்ததுதான். நிறைய மார்க் (மதிப்பெண்) வரும் வி.எஸ். கிருஷ்ணனை இந்த முறை பீட் அடித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். பரீக்ஷை லீவு முடிஞ்சு முத நாள் பேப்பரைக் கொடுத்ததும் பார்த்தால் முதல்ப் பக்கம் முழுக்க சிவப்பு மையால் ஒரு குறுக்குக் கோடு மட்டும் போட்டு வைத்திருந்தது. மார்க் போடவே இல்லை. அது அரையாண்டுத் தேர்வு என்பதால் அடுத்த கிளாஸ் சார் தான் திருத்துவார். அதனால் கிளாஸ் வாத்தியார் மேல குத்தம் சொல்ல முடியாது . இருந்தாலும் அவர்ட்ட போய் கேட்டேன். ”ஏல பரமசிவம் பிள்ளை தான்ல்ல திருத்திருக்காரு போய் அவர்ட்ட கேட்டுட்டு வால” என்று அனுப்பினார். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் ரொம்ப சீனியர். அப்பாவுக்குக் கூட நல்ல நெருக்கம். அவர் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.. ஆங்கிலமும் சமூகவியலும் எடுப்பார்.பெரும்பாலும் கோபப் படாமல் வயசின் தன்மைக்கேற்ப சற்று நிதானமாகவே வகுப்புகளை நடத்துவார். எங்களுக்கு நீதி போதனை வகுப்புக்கு வருவார்.வெள்ளிக்கிழமை காலை கடைசி வகுப்பு. பசியும் தூக்கமுமாய்த்தான் அவர் வருவார்.
நாங்க அவரிடம் ஒவ்வொரு சமயமும் மாரல் கிளாஸில கதை கேட்டு தொந்தரவு பண்ணுவோம். ஏல சும்மாருங்கலே என்று தூங்கறதும் தெரியாம வகுப்பறையில் சத்தமும் கிளம்பிராமப் பாத்துகிறதில் கில்லாடி. நாங்க, சார் கதை சொல்லுங்க கதை சொல்லுங்க என்று நச்சரிப்போம்.ஏல பேசாம இருங்கலே....என்று சொல்லி விட்டு அசந்தாப்பல நாற்காலியில் சாய்ந்து கொள்ளுவார்.இல்லையென்றால் யார் கதை கேட்கிறோமோ அவனைப் பிடித்துக்கொள்ளுவார். ஏல நீ முதல்ல ஒரு கதை சொல்லுலெ என்பார் இல்லைன்னா நீ ஒரு பாட்டு படிலெ என்பார் அவன் நாணிக் கோணி உட்கார்ந்து விடுவான்.
நான் கையில் பேப்பருடன் வகுப்பு வாசலில் நிற்பதைப் பர்த்ததும் உள்ளே கூப்பிட்டார்.நான் ”சார் இதுக்கு மார்க்கே போடலை” என்றதும் பேப்பரைத்தூக்கி மூஞ்சியில் விட்டெறிந்து விட்டு போயி உங்க வாத்தியாரையே கேளுல என்று சத்தம் போடவும் அந்த கிளாஸ் பசங்க சிரிக்கவும் சரியா இருந்தது.கேவலாமாப் போச்சு எனக்கு. ஏதோ கனவு கண்டா வெளில சொல்லக் கூடாதுங்கற மாதிரி கிளாஸ்ல வந்து உக்காந்துகிட்டேன். எங்க கிளாஸ் வாத்தியாரும் ஒன்னும் கேட்கலை.எனக்கு ஞாபகமே இல்லை, அன்னிக்கி வெள்ளிகிழமைன்னு. காலையில கடேசிப் பீரியடுக்கு பரமசிவம் பிள்ளை சார்வா வந்தாங்க.எனக்குன்னா எரிச்சலும் கோவமும். இன்ன மட்டும்ன்னு இல்ல.கிளாஸ் அமைதியாயிருந்தது....சார் கண்ணையும் தலையையும் அசைச்சு இந்தா அவனைப் பாருங்கல என்று என்னை நோக்கி சைகையாலேயே சொன்னார்.கிளாஸ் லேசாச் சிரிச்சுது. ஏல நீ இன்னக்கி ஒரு கதை சொல்லு இல்லேன்னா ஒரு பாட்டு பாடு என்றார்.எனக்கு அழுகை வராத குறைதான். பேசாம எந்திரிச்சு நின்னுகிட்டே இருந்தேன்.ஏல இங்கிலீஷ் பேப்பரை எடுத்துக் கிட்டு இங்க வாலேன்னார் நான் அருகே போனேன். ஏல என்னலே கேள்வியில கேட்டிருக்கு......ரைட் எ பேராக்ராஃப் அபௌட் ஸிட்னி கார்ட்டன்னு தானல கேட்டிருக்கு. நீ இரண்டா எழுதியிருக்கியல. அர்த்தமிருக்கால....அதான் ஒரே கோடா போட்டுட்டேன். முழுப் பரீக்ஷை வரைக்கும் இதை மறக்க மாட்டேல்லா என்றார். எனக்கு மன்சு சமாதனமாகலை... சரி போனாப் போது....அஞ்சு மார்க் வச்சுக்க அழகா வேற எழுதியிருக்கே என்று தடியான பிரெஸிடெண்ட் பேனாவை எடுத்து அஞ்சு அஞ்சும் பத்து மார்க் போட்டார். அப்பவும் வி எஸ்கிருஷ்ணனை பீட் பண்ண முடியல(அவனை யாருமே பீட் பண்ணலை 600 க்கு 516 மார்க் வாங்கியிருந்தான். நான் 378 மட்டும்)அதை இன்றும் மறக்கலை குழந்தைகளுக்கும் சொல்லுகிறேன் எ பேரக்ராஃப்ன்னா ஒரு பேராதான் எழுதனும்ன்னு.
ஞாவகமா அடுத்த பேராவுக்குப் போயிர்றேன்....இது வேற மாதிரி விஷயம்.....கொஞ்சம் உற்சாகம் வந்துது. ஏல இப்ப சுகமா இருக்கா என்றார்.பரமசிவம்பிள்ளை சார். கேட்ட உடனேயே இன்னொரு கேள்வி கேட்டார்உலகத்திலேயேஎதுசுகம்ல என்று.சரீ கதை ஏதோ ஆரம்பமாகப் போகுது என்று தோன்றி உற்சாகம் தொற்றத் தொடங்கியது வகுப்புக்குள். ராஜா கிருஷ்ண தேவராய மஹாராஜாவுக்கு இப்படி ஒரு கேள்வி தோனுச்சு.சபையோரைப் பார்த்துக் கேட்டார் ஆமா உலகத்திலேயே எது ரொம்ப சுகமான விஷயம்ன்னு ஒருத்தர் கடவுளை துதித்துக் கொண்டு இருப்பதே சுகம்ன்னார். அப்பாஜி ஏழையின் சிரிப்பு தான் சுகமான விஷயம்ன்னார்...இன்னொரு மந்திரி நல்ல காவியங்களைப் படிக்கிறது சுகம்ன்னார் இன்னொரு புலவர் நல்ல நிலாவில அழகான அப்ஸரஸ் கூட சப்ர மஞ்சக் கூடத்துல சயனம் பண்றது சுகமோ சுகம்ன்னார்.....தெனாலி ராமன் முறை வந்தது.......அவன் அமைதியாயிருந்தான்.....அவன் சத்தம் போடாம இருந்தா ஏதோ ...வில்லங்கமாச் சொல்லப் போறான்னு எல்லாருக்கும் தோனுச்சுல...அது மாதிரியிலே அவன், ராசா திரும்பத் திரும்ப கேட்டதும் சொன்னாம் பாரு. சபையே மூக்கைப் பொத்திக்கிட்டு.....அவன் சொன்னான் ராஜா, உலகத்திலேயே கொல்லைக்கிப் போறதுதான் சுகம் அப்படீன்னு...ராஜாவுக்கு கோவம் சண்டாளமா வந்துட்டு....இந்த மாதிரி பேசறத நீ விடவே மாட்டியா என்று சத்தம் போட்டார். இல்ல ராசா எனக்கு கொஞ்சம் அவகாசம் தாங்க...ன்னு சொல்லீட்டு சபையிடம் மன்னிப்பு கேட்டுட்டு பின்னாலயே நகர்ந்து வெளியே போய்ட்டான்.தெனாலி ராமன் பெரிய ஆளுலே....சபைக்கே வரலை கொஞ்ச நாளைக்கி. ராஜாவுக்கு தேட்டம் கொடுத்துட்டு ...அவனைக் கூட்டியாங்கலே என்று ஆணை போட்டார். அவனும் வந்தான்...வரும் போதே ரொம்ப வருத்தமாஇருக்கற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டான்....அதாம்ல்ல அவன் கெட்டிக்காரத்தனம்.
ராஜா, குசலமெல்லாம் விசாரிச்சாரு. இவனும் நல்லாப் பதிலெல்லாம் சொல்லிட்டு..ராஜாட்ட சொல்லுவான். ‘ராஜா இந்த ஏழை வீட்டுக்கு நாளைக்கி விருந்துக்கு வரனும் அப்பத்தான் எம்மேல உங்களுக்கு கோவம் இல்லேன்னு அர்த்தம்’ அப்படீன்னான் ராஜா உருகிப்போய் அப்படியேன்னார்.
மறு நாள் தட புடலா ஏற்பாடு நடக்கு.ராஜா கொடுத்த புதூ வீடு.மூனு மாடி வீடு.... மத்தியானம் ராஜா வந்து இற்ங்கினாரு.. பிரமாதமான சாப்பாடு...நல்லா சாப்பிட்டார். ராமன் கூட பேசிக் கொண்டிருந்தார்.. ராமன் சொன்னான் ராஜா ராஜாங்கம் ராஜாங்கம்ன்னு ஒரே வேலை உங்களுக்கு இன்னிக்கு கொஞ்சம் நல்லா ஓய்வெடுங்க...இதுவும் உங்க வீடுதானே மகாராஜா அப்படீன்னான்.ராஜாவும் சரீன்னார். ராஜாவை மூனாவது மாடிக்கு அழைத்துச் சென்றான்..ஒரு அறையில் நல்ல ஏற்பாடெல்லாம் பண்ணி தயாராய் இருந்தது... ராஜா கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனார். இவன் நைசா வெளிய வந்து கதவைப் பூட்டி அங்கன காவலுக்கு இருந்தவங்க கிட்ட ராஜா நல்லா துங்கறதுக்காகவே இங்க வந்திருக்காரு..அவர தொந்தரவு பண்ணாதிங்க அவரா கூப்பிட்ட பிறகு என்னயக் கூப்பிடுங்க நன் வந்து திறக்கிறேன்....னு சொல்லீட்டு கிழே போய்ட்டான்..கொஞ்ச நேரம் ஆச்சு. ராஜாவுக்கு வயிறு கட முடாங்கு..சமாளிச்சுப் பாக்காரு முடியலை...தெனாலி ராமன் சாப்பாட்டில எல்லாத்திலையும் கொஞ்சம் கொஞ்சம் விளக்கெண்ணைய சேர்த்திருந்தான்..அதான் இப்ப வேலையக் காமிக்க ஆரம்பிச்சுது.ராஜா கதவைத்தட்டி காவக்காரனைக் கூப்பிட்டு கதவைத் திறங்கடா ன்னாரு..சாவி ராமன்ட்டல்லா இருக்கு...ஒரு ஆள் ஒடிப் போய் சொன்னான். ராமன் சௌகரியமா வாரான்.வந்து மெதுவா கதவைத் திறக்கான்...ராஜா பதட்டமா விஷயத்தச் சொல்லி கக்கூஸ் எங்கடாங்காரு .அப்படியா ராஜா வாங்க வாங்கன்னு கீழ கூட்டிட்டுப் போறான் அதுவும் சுத்திச் சுத்தி புறவாசலுக்கு கூட்டிட்டுப் போய் கக்கூஸில கொண்டு போய் விட்டான் ராஜா உள்ளே ஓடியே போய் சரியா தாழ்ப்பாள் கூடப் போடாம காரிய்த்தைக் கவனிக்காரு.ராமன் வெளியே இருந்து மெதுவாக் கேட்டான் ராஜா எப்படியிருக்கு..அப்படின்னு ராஜா சொன்னாரு ரொம்ப சொகமாருக்கப்பா அப்படீன்னு......கிளாஸ்ல் குபீர்ன்னு சிரிப்பு பக்கத்துக் கிளாஸெல்லாம் என்ன என்ன அப்படீன்னு கேக்கறமாதிரி ஆயிட்டு..நல்ல வேளை மதியம்ரீசஸுக்கு பெல் அடிச்ச்சுட்டு..
சாரை காலையில் புட்டாரத்தி அம்மன் கோயில்ல பாத்தா அப்படி உருக்கமா பாடி சாமி கும்பிடுவாரு.இந்த மனுஷனா இப்ப்டி கதையெல்லம் சொல்லுதாருன்னும் தோனும்.....அந்த பதினாறு வயசுகளில் அப்படி அழகான மனுஷர்களையும் இப்ப்டிக் கதைகளையும் கேட்டுத்தானோ என்னவோ
அதென் அசிங்கங்களுக்கான அழகான கவிதை....என்று எழுதினேனோ என்னவோ. யார் கண்டது.
நாங்க அவரிடம் ஒவ்வொரு சமயமும் மாரல் கிளாஸில கதை கேட்டு தொந்தரவு பண்ணுவோம். ஏல சும்மாருங்கலே என்று தூங்கறதும் தெரியாம வகுப்பறையில் சத்தமும் கிளம்பிராமப் பாத்துகிறதில் கில்லாடி. நாங்க, சார் கதை சொல்லுங்க கதை சொல்லுங்க என்று நச்சரிப்போம்.ஏல பேசாம இருங்கலே....என்று சொல்லி விட்டு அசந்தாப்பல நாற்காலியில் சாய்ந்து கொள்ளுவார்.இல்லையென்றால் யார் கதை கேட்கிறோமோ அவனைப் பிடித்துக்கொள்ளுவார். ஏல நீ முதல்ல ஒரு கதை சொல்லுலெ என்பார் இல்லைன்னா நீ ஒரு பாட்டு படிலெ என்பார் அவன் நாணிக் கோணி உட்கார்ந்து விடுவான்.
நான் கையில் பேப்பருடன் வகுப்பு வாசலில் நிற்பதைப் பர்த்ததும் உள்ளே கூப்பிட்டார்.நான் ”சார் இதுக்கு மார்க்கே போடலை” என்றதும் பேப்பரைத்தூக்கி மூஞ்சியில் விட்டெறிந்து விட்டு போயி உங்க வாத்தியாரையே கேளுல என்று சத்தம் போடவும் அந்த கிளாஸ் பசங்க சிரிக்கவும் சரியா இருந்தது.கேவலாமாப் போச்சு எனக்கு. ஏதோ கனவு கண்டா வெளில சொல்லக் கூடாதுங்கற மாதிரி கிளாஸ்ல வந்து உக்காந்துகிட்டேன். எங்க கிளாஸ் வாத்தியாரும் ஒன்னும் கேட்கலை.எனக்கு ஞாபகமே இல்லை, அன்னிக்கி வெள்ளிகிழமைன்னு. காலையில கடேசிப் பீரியடுக்கு பரமசிவம் பிள்ளை சார்வா வந்தாங்க.எனக்குன்னா எரிச்சலும் கோவமும். இன்ன மட்டும்ன்னு இல்ல.கிளாஸ் அமைதியாயிருந்தது....சார் கண்ணையும் தலையையும் அசைச்சு இந்தா அவனைப் பாருங்கல என்று என்னை நோக்கி சைகையாலேயே சொன்னார்.கிளாஸ் லேசாச் சிரிச்சுது. ஏல நீ இன்னக்கி ஒரு கதை சொல்லு இல்லேன்னா ஒரு பாட்டு பாடு என்றார்.எனக்கு அழுகை வராத குறைதான். பேசாம எந்திரிச்சு நின்னுகிட்டே இருந்தேன்.ஏல இங்கிலீஷ் பேப்பரை எடுத்துக் கிட்டு இங்க வாலேன்னார் நான் அருகே போனேன். ஏல என்னலே கேள்வியில கேட்டிருக்கு......ரைட் எ பேராக்ராஃப் அபௌட் ஸிட்னி கார்ட்டன்னு தானல கேட்டிருக்கு. நீ இரண்டா எழுதியிருக்கியல. அர்த்தமிருக்கால....அதான் ஒரே கோடா போட்டுட்டேன். முழுப் பரீக்ஷை வரைக்கும் இதை மறக்க மாட்டேல்லா என்றார். எனக்கு மன்சு சமாதனமாகலை... சரி போனாப் போது....அஞ்சு மார்க் வச்சுக்க அழகா வேற எழுதியிருக்கே என்று தடியான பிரெஸிடெண்ட் பேனாவை எடுத்து அஞ்சு அஞ்சும் பத்து மார்க் போட்டார். அப்பவும் வி எஸ்கிருஷ்ணனை பீட் பண்ண முடியல(அவனை யாருமே பீட் பண்ணலை 600 க்கு 516 மார்க் வாங்கியிருந்தான். நான் 378 மட்டும்)அதை இன்றும் மறக்கலை குழந்தைகளுக்கும் சொல்லுகிறேன் எ பேரக்ராஃப்ன்னா ஒரு பேராதான் எழுதனும்ன்னு.
ஞாவகமா அடுத்த பேராவுக்குப் போயிர்றேன்....இது வேற மாதிரி விஷயம்.....கொஞ்சம் உற்சாகம் வந்துது. ஏல இப்ப சுகமா இருக்கா என்றார்.பரமசிவம்பிள்ளை சார். கேட்ட உடனேயே இன்னொரு கேள்வி கேட்டார்உலகத்திலேயேஎதுசுகம்ல என்று.சரீ கதை ஏதோ ஆரம்பமாகப் போகுது என்று தோன்றி உற்சாகம் தொற்றத் தொடங்கியது வகுப்புக்குள். ராஜா கிருஷ்ண தேவராய மஹாராஜாவுக்கு இப்படி ஒரு கேள்வி தோனுச்சு.சபையோரைப் பார்த்துக் கேட்டார் ஆமா உலகத்திலேயே எது ரொம்ப சுகமான விஷயம்ன்னு ஒருத்தர் கடவுளை துதித்துக் கொண்டு இருப்பதே சுகம்ன்னார். அப்பாஜி ஏழையின் சிரிப்பு தான் சுகமான விஷயம்ன்னார்...இன்னொரு மந்திரி நல்ல காவியங்களைப் படிக்கிறது சுகம்ன்னார் இன்னொரு புலவர் நல்ல நிலாவில அழகான அப்ஸரஸ் கூட சப்ர மஞ்சக் கூடத்துல சயனம் பண்றது சுகமோ சுகம்ன்னார்.....தெனாலி ராமன் முறை வந்தது.......அவன் அமைதியாயிருந்தான்.....அவன் சத்தம் போடாம இருந்தா ஏதோ ...வில்லங்கமாச் சொல்லப் போறான்னு எல்லாருக்கும் தோனுச்சுல...அது மாதிரியிலே அவன், ராசா திரும்பத் திரும்ப கேட்டதும் சொன்னாம் பாரு. சபையே மூக்கைப் பொத்திக்கிட்டு.....அவன் சொன்னான் ராஜா, உலகத்திலேயே கொல்லைக்கிப் போறதுதான் சுகம் அப்படீன்னு...ராஜாவுக்கு கோவம் சண்டாளமா வந்துட்டு....இந்த மாதிரி பேசறத நீ விடவே மாட்டியா என்று சத்தம் போட்டார். இல்ல ராசா எனக்கு கொஞ்சம் அவகாசம் தாங்க...ன்னு சொல்லீட்டு சபையிடம் மன்னிப்பு கேட்டுட்டு பின்னாலயே நகர்ந்து வெளியே போய்ட்டான்.தெனாலி ராமன் பெரிய ஆளுலே....சபைக்கே வரலை கொஞ்ச நாளைக்கி. ராஜாவுக்கு தேட்டம் கொடுத்துட்டு ...அவனைக் கூட்டியாங்கலே என்று ஆணை போட்டார். அவனும் வந்தான்...வரும் போதே ரொம்ப வருத்தமாஇருக்கற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டான்....அதாம்ல்ல அவன் கெட்டிக்காரத்தனம்.
ராஜா, குசலமெல்லாம் விசாரிச்சாரு. இவனும் நல்லாப் பதிலெல்லாம் சொல்லிட்டு..ராஜாட்ட சொல்லுவான். ‘ராஜா இந்த ஏழை வீட்டுக்கு நாளைக்கி விருந்துக்கு வரனும் அப்பத்தான் எம்மேல உங்களுக்கு கோவம் இல்லேன்னு அர்த்தம்’ அப்படீன்னான் ராஜா உருகிப்போய் அப்படியேன்னார்.
மறு நாள் தட புடலா ஏற்பாடு நடக்கு.ராஜா கொடுத்த புதூ வீடு.மூனு மாடி வீடு.... மத்தியானம் ராஜா வந்து இற்ங்கினாரு.. பிரமாதமான சாப்பாடு...நல்லா சாப்பிட்டார். ராமன் கூட பேசிக் கொண்டிருந்தார்.. ராமன் சொன்னான் ராஜா ராஜாங்கம் ராஜாங்கம்ன்னு ஒரே வேலை உங்களுக்கு இன்னிக்கு கொஞ்சம் நல்லா ஓய்வெடுங்க...இதுவும் உங்க வீடுதானே மகாராஜா அப்படீன்னான்.ராஜாவும் சரீன்னார். ராஜாவை மூனாவது மாடிக்கு அழைத்துச் சென்றான்..ஒரு அறையில் நல்ல ஏற்பாடெல்லாம் பண்ணி தயாராய் இருந்தது... ராஜா கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனார். இவன் நைசா வெளிய வந்து கதவைப் பூட்டி அங்கன காவலுக்கு இருந்தவங்க கிட்ட ராஜா நல்லா துங்கறதுக்காகவே இங்க வந்திருக்காரு..அவர தொந்தரவு பண்ணாதிங்க அவரா கூப்பிட்ட பிறகு என்னயக் கூப்பிடுங்க நன் வந்து திறக்கிறேன்....னு சொல்லீட்டு கிழே போய்ட்டான்..கொஞ்ச நேரம் ஆச்சு. ராஜாவுக்கு வயிறு கட முடாங்கு..சமாளிச்சுப் பாக்காரு முடியலை...தெனாலி ராமன் சாப்பாட்டில எல்லாத்திலையும் கொஞ்சம் கொஞ்சம் விளக்கெண்ணைய சேர்த்திருந்தான்..அதான் இப்ப வேலையக் காமிக்க ஆரம்பிச்சுது.ராஜா கதவைத்தட்டி காவக்காரனைக் கூப்பிட்டு கதவைத் திறங்கடா ன்னாரு..சாவி ராமன்ட்டல்லா இருக்கு...ஒரு ஆள் ஒடிப் போய் சொன்னான். ராமன் சௌகரியமா வாரான்.வந்து மெதுவா கதவைத் திறக்கான்...ராஜா பதட்டமா விஷயத்தச் சொல்லி கக்கூஸ் எங்கடாங்காரு .அப்படியா ராஜா வாங்க வாங்கன்னு கீழ கூட்டிட்டுப் போறான் அதுவும் சுத்திச் சுத்தி புறவாசலுக்கு கூட்டிட்டுப் போய் கக்கூஸில கொண்டு போய் விட்டான் ராஜா உள்ளே ஓடியே போய் சரியா தாழ்ப்பாள் கூடப் போடாம காரிய்த்தைக் கவனிக்காரு.ராமன் வெளியே இருந்து மெதுவாக் கேட்டான் ராஜா எப்படியிருக்கு..அப்படின்னு ராஜா சொன்னாரு ரொம்ப சொகமாருக்கப்பா அப்படீன்னு......கிளாஸ்ல் குபீர்ன்னு சிரிப்பு பக்கத்துக் கிளாஸெல்லாம் என்ன என்ன அப்படீன்னு கேக்கறமாதிரி ஆயிட்டு..நல்ல வேளை மதியம்ரீசஸுக்கு பெல் அடிச்ச்சுட்டு..
சாரை காலையில் புட்டாரத்தி அம்மன் கோயில்ல பாத்தா அப்படி உருக்கமா பாடி சாமி கும்பிடுவாரு.இந்த மனுஷனா இப்ப்டி கதையெல்லம் சொல்லுதாருன்னும் தோனும்.....அந்த பதினாறு வயசுகளில் அப்படி அழகான மனுஷர்களையும் இப்ப்டிக் கதைகளையும் கேட்டுத்தானோ என்னவோ
அதென் அசிங்கங்களுக்கான அழகான கவிதை....என்று எழுதினேனோ என்னவோ. யார் கண்டது.
Subscribe to:
Posts (Atom)