Monday, December 12, 2011


மனோ வேளை

இருட்டைப் பற்றிய
பொறியொன்று
மனதில் ஒளிர்ந்த வேளை

பேருந்து
தன் வழித்தடத்தில்
பழுதாகி நின்றது

மனோ வேளையை
நிகழ்வுடன்
இணைக்க முயற்சிக்கையில்
இடம்  பிடிபட்டது
சமீபத்தில் கட்டிய
புது மயானம்

எரிந்து கொண்டிருக்கும்
சிதையிலிருந்து
தீப்பொறிகள் வெடித்து
இருளில் கரைகின்றது

ஒரு படிமம்
இப்படியும் தன்னை
நிகழ்த்திக் காட்டும்
போலும்
                     -கலாப்ரியா
 

3 comments:

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு

rvelkannan said...

எனக்கு முழுக்கவிதையும் படிமத்தை
நோக்கிய மற்றொரு படிமாக தெரிகிறது

ஜமாலன் said...

கவிதை நன்றாக உள்ளது. கவிதைக்குள் நகரும் படிமத்தின் வளர்ச்சி நவீனமாக உள்ளது.

Visitors