Saturday, July 12, 2008

உதிரிகள்


வெளிவராத சினிமாப் பாடல்கள் மாதிரி பிரசுரமாகாத கவிதைகள்ன்னு பழைய நோட்டுக்களில் கவிதைக் கிறுக்கல்கள் நிறைய இருக்கு...உதிரி உதிரியாய்.... உதாரணத்துக்கு ஒன்று.

இரண்டு புறமும்
ஒவ்வொரு பாடலுள்ள
இசைத் தட்டு:
காலைப் பந்தி
முடிந்து விடுமென்ற அவசரத்தில்
வேடிக்கை பார்க்கிறவர்களுள்
கொஞ்சம் சூட்டிகையாய்த் தெரிந்த
பையனிடம்
கிராம போனைக்
கவனிக்கச் சொல்லி விட்டு
சாப்பிடச் சென்றான்
ஸ்பீக்கர் செட் ஆள்
இரண்டாம் இட்லியை
விண்ட போது
கவனமுடனும் கர்வமுடனும்
திருப்பிப் போட்டு
சுப முகூர்த்தத் திற்குச்
சற்றும் பொருந்தாத
சோகப் பாட்டைச் சுழல விட்டான்
காவலுக்கு நின்றவன்
“நடக்கும் என்பார் நடக்காது...”
(பிப்ரவரி 1993)



1 comment:

ரௌத்ரன் said...

படித்த உடண் குபுக்னு சிரிப்பு வந்துடுச்சு சார்...

Visitors