Saturday, October 23, 2010

நன்றி: அழகம்பெருமாள், திரைப்பட இயக்குநர்

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

.உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாகஉணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும்உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக,காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவுதொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாகஇருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் ,பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில்நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின்வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNNஇணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல்பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக,மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவுநடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள்அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க படஇருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டுமணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலைஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொருஇந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையைவிட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம்சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்துசெல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்னசெய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களைதேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார்.மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம்முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்குமூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒருகோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள்விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்றசெப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரியஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதைபெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர்அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும்அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டுவேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இதுபோன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இதுநடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றிநூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்றமனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடையவாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர்குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க.நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதைகேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரதுசேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களைபார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்றுசொல்லிருக்கிறார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப்பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்லவிசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டுபோடவேண்டிய இடம்
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாகவரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம்எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டுசேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
-------------------------

Visitors